என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தனியார் பள்ளி பஸ் மோதல்
நீங்கள் தேடியது "தனியார் பள்ளி பஸ் மோதல்"
பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஏ.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பெருமாள் (வயது 31), கூலி தொழிலாளி. மேலும் இவர் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பால் கரந்து கொடுப்பார். நேற்று மாலை வீட்டில் இருந்து பால் கரக்க மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் இந்த விபத்து நடந்து அவர் பலியானதை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் இறந்த பெருமாளுக்கு முனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
கச்சிராயப்பாளையம் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 20). பால் வியாபாரி.
இன்று காலை 9 மணிக்கு பாலாஜி மோட்டார் சைக்கிளில் எடுத்தவாய்நத்தம் பகுதியில் இருந்து அருகில் உள்ள அம்பேத்கார் நகருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் ஒன்று பாலாஜியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X